Friday, January 4, 2013

ரெண்டு வயசு பொண்ணு..



முழுசா   வயசு ரெண்டாச்சு முன் பல்லு ரெண்டும் முளச்சாச்சு
முழுசா பேச நாளாச்சு ..முயன்று நானும் ஜெயிச்சாச்சு..
கன்ன கசக்கிக்கிட்டு கண்மணி நான் வந்திருக்கேன் 
காத்திருந்து பெத்தவளே.. கண்டுக்காம நிக்கிறியே..

அப்பா வந்தானே..அன்பு முத்தம் தந்தானே..அரைநிமிஷம்னு சொல்லிப்பிட்டு ஆபீசுக்கு போறானே..அரையும் முழுசாச்சு.. சூரியனும் நிலவாச்சு..
இப்பவும் முளிசிருக்கேன்.. இன்னும் திரும்பலையே..

அய்யா வந்தாரே..  ஆப்பில் வாங்கி தந்தாரே..முள்ளு மீசையில முத்தம்தான் கொடுத்தாரே..கண்ணத்த நகத்திபுட்டு  என்னன்னு கேட்டதுக்கு.. 
முரட்டு மீசையின்னு முறுக்கிக்கிட்டு சிரிக்கிறாரே..

மாமா வந்தானே.. காட்பரீசு தந்தானே..
கட்டிபுடிச்சு என்ன.. கட்டிக்கிற கேக்குறானே..
நீயா நானா-ன்னு நித்தம் ஒன்னு பாத்தாலும்
மாமா இவனுக்கு மண்டையில ஏராதா..

ஆச்சி வந்தாளே.. ஆசீர்வாதம் தந்தாளே..இன்னும் கொஞ்சம் வாங்கிவர கோயிலுக்கு போனாளே..சும்மா போனா  நான் சுகமா இருந்திருப்பேன்..
எனக்கு சேத்துன்னு இடுப்புல ஏத்துறாளே..
கண்ணு கும்பிடுன்னு கருங்கல்ல காட்டிபுட்டு..
பொம்மைன்னு சொன்னதுக்கு கண்ணத்துல போடுறாளே..

கண்ணே மணியேன்னு..காலமெல்லாம் கொஞ்சுறியே..
என் கன்னம் படும் பாடு உன் காதுக்குதான் கேக்கலையா..

கன்ன கசக்கிக்கிட்டு கண்மணி நான் வந்திருக்கேன்
காத்திருந்து பெத்தவளே.. கண்டுக்காம நிக்கிறியே..