Sunday, July 10, 2016

தமிழ் பிறந்த நாள்..

உன் பிறந்தநாளுக்கு
உனக்கு தெரியாமல்
ஏதாவது
செய்யலாம் என்று
ஏதேதோ
செய்து பார்க்கிறேன்..

இப்போதுதான்
தெரிகிறது..

என்னுள்
முழுமையாய்
நிறைந்து விட்ட
உன்னை விடுத்து
என்னால் எதுவுமே
செய்ய முடியாதென்று...

எனக்காக பிறந்தவளே..
ஒன்று மட்டும் உறுதி..

உன் பிறந்தநாளில்
பூக்கிற
இக்கவிதை..
சங்கம் வளர்த்த
தமிழை
ஒரு அங்குலமாவது
உயர்த்தும்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

Saturday, July 9, 2016

மனைவி - இறைவி..

மனைவி
அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த
வரம்...

கடவுள்
மறுப்பாளன்
நான்
இதை எப்படி
மாற்றிச்  சொல்ல ?

மனிதன் படைத்த
படைப்புகளில்
மனைவி..
இறைவி...

Sunday, May 15, 2016

அறிவு என்பது..

பெரியாரை
தமிழின தலைவராக
ஏற்க முடியாது
என்பற்காக
சீமானும் கருணாவும் ஒன்று
என்று பொய்யுரை பரப்பும்
திராவிட கட்சி நண்பர்களை
ஏன் யாரும் கேள்வி கேட்க
மறுக்கிறீர்கள் ?

தமிழ் நாட்டில் தமிழன்
ஆள வேண்டும் என்று
நாம் தமிழர் பேசுகையில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
தெலுங்கு எதிர்ப்பு வாதம்
பேசுபவர்கள்தான்
நாம் தமிழர் கட்சியினர்
என்று பேசும்
தெலுங்கு நண்பர்களை
ஏன் யாரும் கேள்வி கேட்க
மறுக்கிறீர்கள் ?

துண்டறிக்கை
அடிக்க கூட
காசு இல்லாத
நாம் தமிழர்
கட்சியை
ஓட்டுக்கு இரு  நூறு
கடலூரில் கொடுக்கிறார்கள்
என்று  பரப்பும்
அதிமுக /திமுக
நண்பர்களை
ஏன் யாரும் கேள்வி கேட்க
மறுக்கிறீர்கள் ?

ஐம்பது வருடங்கள் 
நடந்த கேடுகெட்ட 
அரசியலை கேள்வி 
கேட்க முன்வராத 
நண்பர்கள் 
முதல் முறையாக 
களமிறங்கும் 
நாம் தமிழரை மட்டும் ஏன் 
குறை கூற வேண்டும்  என்று
ஏன் யாரும் கேள்வி கேட்க
மறுக்கிறீர்கள் ?

முரண்பாட்டு 
கருத்துக்களை மட்டுமே 
முன்வைக்க முனைகிற 
நண்பர்கள் 
நாம் தமிழர் கட்சியின் 
சரியான கருத்துக்களை 
பகிர முன் வராதது ஏன்?

அறிவு என்பது 
தவறுகளை சுட்டிக்காட்டுவது 
மட்டுமல்ல.. 
சரியானவற்றை 
அடையாளப் படுத்துவதும்தான்..

Saturday, May 14, 2016

மலரட்டும் மக்களுக்கான நல்லாட்சி...

கொத்துக் கொத்தாய்
கொன்று குவிக்கப்பட்ட
சொந்தங்களை
காப்பாற்ற முடியாத
குற்ற உணர்ச்சி
உனக்கு
இன்னும் இருக்குமானால்...

மானத் தமிழர்களை
மண்டியிடவைத்து
அடிமையாய்
அடிபணிய  கிடத்தியது
அவமானம் என்று
நீ
நினைப்பாயானால்

இந்த தேர்தலே
திமுக,
அதிமுகாவிற்கு
இறுதி ஊர்வலமாய்
இருக்கட்டும்..

ஓட்டுக்காக
நீ
அழுத்துகின்ற
அந்த பொத்தான்
வேட்டாய் மாறி
இவர்கள்
வெடித்துச் சிதறட்டும்..

மதுவும்,
லஞ்சமும்,
ஊழலும்,
சாதிய கொடுமையும்
இவர்களோடு சேர்த்து
மண்ணோடு மண்ணாய்
போகட்டும்..

மலரட்டும்
மக்களுக்கான
நல்லாட்சி
அதற்க்கு
நீ
போடும்
ஓட்டு
மட்டுமே
சாட்சி..

Tuesday, May 3, 2016

சூழ்ச்சி - ஆட்சி

நாம் தமிழரை எதிர்த்து
தங்களை அறிவு ஜீவிகளாக
கட்டிக்கொள்ள முற்படும்
இந்துத்துவ நண்பர்கள்
ஏன் பா.ஜ.காவை கூட பரிந்துரைக்க மறுக்கிறார்கள்?

இவங்களுக்கு நாகேஷ் மாதிரி
கேள்வி கேட்க மட்டும் தான் தெரியுமோ?

நாம் தமிழரை எதிர்த்து
விஜயகாந்தை மறைமுகமாக
ஆதரிக்கும் மநகூ நண்பர்கள்
மனநிலை என்னவாக இருக்கும்?

மடையனாக இருந்தாலும் பரவாயில்லை
தமிழனாக மட்டும் இருந்து விட கூடாதென்றா ?

சூழ்ச்சி அறிவோம்..
ஆட்சி புரிவோம்..

நாம் தமிழர்

Thursday, April 21, 2016

சூடு, சொரண..

பொதுக்கூட்டத்தில் மேலும் இருவர் பலி..

செய்தியை படித்து விட்டு
சாதாரணமாய்
கடந்து போகிறோம் நாம்.

இறந்தவர்கள் 
நம் குடும்பத்தை
சேர்ந்தவராக
இருந்தால்
நம் கோபம்
என்னவாக இருக்கும் ?

உப்பு சிறிதேனும்
நம் உணவில்
சேர்த்துக்கொள்வது
உண்மையானால்..

ஓடுகிற குருதியில்
ஒருதுளி
சூடும், சொரணையும்
நமக்கு இருக்குமானால் ..

திராவிட அரசியலை
வேரோடு புதைத்து
இறந்தவர்களுக்கு
இரங்கல் செய்வோம்..







Wednesday, April 20, 2016

அரசியல் கழிவறை..

பொதுக் கழிவறையில்
இயற்கை உபாதைக்காக
ஒதுங்குகிறார்கள்
மூவர்..

உள்ளே நுழையக்கூட
முடியாமல்
ஓட்டம் பிடிக்கிறான்
ஒருவன்.

வரிசையில் நிற்கும்
தன் வாரிசுகளுக்காக
தண்ணீரை இறைத்து
சுத்தம் செய்ய
தயாராகிறான்
ஒருவன்.

மூக்கை பொத்திக்கொண்டு
சிறுநீர் கழித்தபடியே
சுத்தம் செய்பவனை
ஏளனம் செய்கிறான்
இன்னொருவன்..

இவர்களில்
நீங்கள் யாராய்
இருக்க போகிறீர்கள்..

அரசியலை
சுத்தம் செய்ய
நமக்கு
ஐந்து வருடங்களுக்கு
ஒரு முறைதான்
வாய்ப்பு.

நாம் தமிழருக்கு
வாக்களிப்போம்..
நம் அரசியலை
சுத்தம் செய்வோம்..



Wednesday, April 13, 2016

சொல் அல்ல செயல்..

தொடர்ச்சியான "நாம் தமிழர்" முகநூல் பகிர்வுகளோடு தொடர்ந்தது என் தொகுதி வேட்பாளருடனான  தொலைபேசி உரையாடல்..

வணக்கம்னே..
என்ற வட்டார வணக்கத்தோடு அறிமுகமானார் பொறியியல் பட்டதாரி.
என் குடும்பம், என் வாழ்கை என்று பழக்கப்பட்ட பொறியாளர்களுக்கு மத்தியில், அவர் அரசியலுக்கு வருவதற்கான காரணத்தை அடுக்கியது அவர் மீதான கவனத்தை கூடுதலாக்கியது.

நான் வளர்ந்து, வாழ்ந்த என் தொகுதின் சராசரி பிரச்சனைகளை அவர் வரிசைபடுத்த, நான் வாயடைத்து போனது என்னோமோ உண்மை..

நீங்க ஏன் ப்ரொஜெக்டர் பயன்படுத்தி பிரச்சாரம் பண்ண கூடாது ? என்ற என் கேள்விக்கு அவர் அளித்த பதிலுக்காகத்தான் இந்த பதிவு.

பதில்: இந்த மாச சம்பளம் வந்தவுடன பண்ணலாமுன்னு இருகேன்ன்னே..

தொடர்ந்து சில மணித்துளிகள்  பேசிவிட்டு கணத்த இதயத்தோடு தொலைபேசியை அணைத்தேன்.

அப்போதுதான் புரிந்தது
நாம் தமிழர்
முன் வைக்கும்
மாற்றம் என்பது
சொல் அல்ல செயல் என்று...

நாம் தமிழர்.. 

Monday, April 11, 2016

ஓட்டு - நிலைப்பாடு..

என்னால் என்ன
ஆகப்போகிறது
அரசியலுக்கு?
அரசியலால் என்ன
ஆகப்போகிறது
எனக்கு ?
என்ற இரண்டு
நிலைப்பாட்டையும்
தயவுசெய்து 
விட்டொழிப்போம்.. 

அறிமுகமான
நண்பர்களின்
அரசியல் பற்றிய
ஒரு முகநூல்
பதிவு யாரோ
ஒரு நண்பருக்கு
அரசியல்
அறிமுகமாக
இருக்கலாம்
என்று  நம்புவோம்.

ஜெயிக்கிற கட்சிக்கு
ஓட்டு போடணுங்கற
பாமர மனநிலை
படித்தவர்களிடமும்
இருக்கிறது  என்பதால்
உங்களின் ஒரு பதிவு
உங்கள் நண்பர்களின்
வாயிலாக பலரை
மாற்றும்
என்று  புரிவோம்.

என் ஓட்டு
தோற்று போய்விடக்கூடாது
என்பதற்காக
நமக்கு
பிடித்த கட்சியை
விட்டுவிட்டு
பெரும்பான்மையை
ஆதரிப்பது
தவறென்று
திருந்துவோம்..

எதிர் நிலைப்பாடு
மட்டுமே கொண்டவர்கள்
எந்த கட்சியையும்
அடையாளம்
காட்ட மாட்டார்கள்
என்பதை அறிவோம்.

ஆதரிப்போம் நாம் தமிழர்.
பகிர்வோம்..
பரப்புவோம்.



Sunday, April 10, 2016

நில் கவனி கடந்து போகாதே..

என் முகநூல் நண்பர்களுக்கு

"நாம் தமிழர்"
கருத்துக்களையும்,
காணொளிகளையும்  சிலர்
திரும்ப திரும்ப
பதிவிடுவதன் காரணத்தை
எப்போதாவது யோசித்ததுண்டா ?

பதிவிடுபவர்களின்
முந்தைய பதிவுகளை
வைத்து அவர்கள் தன்னை
முன்னிறுத்தி பதிவிடுபவர்களா?
அல்லது விளம்பரத்திற்காக
பதிவிடுபவர்களா?
என்று ஆராய்ச்சி நடத்தியதுண்டா ?

நாம் தமிழரை
குற்றம் சொல்பவர்களை
தவிர்த்து பிற கட்சிகளை
வெளிப்படையாக
ஆதரிக்கும் நண்பர்கள்
யாரேனும் உள்ளார்களா
என்று வினவியதுண்டா ?

இன்றைய கால கட்டத்தில்
ஒரு அரசியல்  நிலைப்பாட்டை
அறிந்து அதனை ஆதரித்து
பொது தளத்தில் பதிவிட
முன்வரும்
உங்கள் நண்பர்களின்
எண்ணிக்கை
என்ன தெரியுமா?

பிற கட்சிகளை
சேர்ந்த உங்கள்
நண்பர்களில்
எத்தனை பேர்
இப்போது
நாம் தமிழரை
ஆதரிக்கிறார்கள் என்று
கணக்கு பார்த்ததுண்டா?

இந்த கேள்விகளை
உங்களுக்குள் கேட்டு
பதில்களை வரிசைபடுதினால்
மிஞ்சுவது நீங்கள்
நாம் தமிழரை
ஆதரிக்க வேண்டும்
என்ற நிலைப்பாடு
மட்டுமே..

தமிழகத்தில்
நாம் தமிழரை
நிராகரித்துவிட்டு
நீங்கள்
எந்த கட்சிக்கு
ஒட்டு போடா போகிறீர்கள்?

ஊழலில் தின்று கொழுத்த
திராவிட கட்சிகளுக்கா  ?

சகதியில் ஊறித் திளைக்கிற
சாதிக் கட்சிகளுக்கா ?

பேரம் படியாமல் கூடி நகைக்கும்
கூட்டணி காட்சிகளுக்கா ?

நம் மௌனம்தான்
இதுவரை ஆண்ட,
ஆளுகிற
கறைபடிந்த
கட்சிகளின் வெற்றி..

மௌனம் களைப்போம்..

கொத்துக் கொத்தாய் 
கொன்று குவிக்கப்பட்ட 
நம் சொந்தங்களை 
காப்பாற்ற முடியாத  
குற்ற உணர்ச்சி நமக்கு 
இன்னும் இருக்குமானால்..

காட்டு மரம் 
வெட்டியதற்காக 
ஓடவிட்டு
சுட்டுக் கொல்லப்பட்ட 
தமிழர்களை  பற்றிய 
பரிதாபம் நமக்கு 
இன்னும் இருக்குமானால்.. 

அம்மாவின் சிறைக்காக 
கண்ணீர் சிந்தும்   
அண்டை மாநில 
தண்ணீருக்காக   
பிச்சை எடுக்கும்  
அவமானம்  நமக்கு 
இன்னும் இருக்குமானால்.. 

நம்  கரங்களை 
வலுப்படுத்துவதை தவிர 
வேறு வழியே இல்லை..
ஆதரிப்போம் 
நாம் தமிழர்..

இது  
தமிழ்நாட்டில்
வாழ்ந்த 
வாழ்கிற 
தமிழ் பேசும் 
நாம் ஒவ்வொருவரின் 
கடமை..

பகிர்வோம்... 
பரப்புவோம்..
நாம் தமிழர்..

Wednesday, April 6, 2016

நான் (ம்) தமிழர் வாக்காளன்..

அறம் சார்ந்த
அரசியலை
முன்னெடுக்கும்
முயற்சிக்காகவும்
முழக்கத்துக்காகவும்
நான்
நாம் தமிழரை ஆதரிக்கிறேன்..

சாதி மத சாக்கடை
அரசியலுக்கு நடுவே
மொழிகொண்டு எம்
மக்களை மீட்கப்போராடும்
மதி என்னை ஈர்பதால்
நான்
நாம் தமிழரை ஆதரிக்கிறேன்..

பெயரளவில்
மாற்றம் பேசும்
கட்சிகளுக்கு
நடுவே
செயல் வடிவில்
கூட்டங்களில் மாற்றம்
காட்டும் மாற்றுக்காக
நான்
நாம் தமிழரை ஆதரிக்கிறேன்..

ஓட்டுக்காக 
பணம் கொடுத்து 
பிச்சை  எடுக்கிற 
வேட்பாளர்களுக்கு 
நடுவே 
என் கருத்தியலில் 
உடன்பாடு 
இல்லையெனில் 
உன் ஓட்டு எனக்கு தீட்டு 
என்று சொல்லும் 
தைரியத்திற்காக 
நான்
நாம் தமிழரை ஆதரிக்கிறேன்..

ஊழல் கறைபடிந்த 
வேட்டிகளுக்கு நடுவே 
கறை படியாத 
கரங்களோடு 
போட்டியிடும்  
எம் இளந் தலைமுறை 
வேட்பாளர்களுக்காக 
நான்
நாம் தமிழரை ஆதரிக்கிறேன்..

கொள்கை 
முரண்பாடுகளோடு 
கூட்டணி கட்சிகள் 
தேர்தல் அறிக்கை படிக்க  ..
இதுவரை தமிழ்நாடு 
கண்டிறாத 
செயல் திட்ட வரைவை 
செய்தியாக்கியதற்காக..
நான்
நாம் தமிழரை ஆதரிக்கிறேன்..

செந்தமிழின் சுவை பேசி 
வள்ளுவனின் குறள் படித்து 
பாவேந்தனின் பாட்டுப் பாடி 
என்னில் 
மறக்கடிக்கப்பட்ட தமிழை 
மீட்டுருவம் செய்யும் 
முயற்சிக்காக 
நான்
நாம் தமிழரை ஆதரிக்கிறேன்..

உலகத்தின் வெவ்வேறு 
தேசங்களில் பரவி வாழும் 
ஒவ்வொரு தமிழனையும்
ஒருங்கிணைக்கும் 
முயற்சிக்காக 
நான்
நாம் தமிழரை ஆதரிக்கிறேன்..

நாமே இந்த அரசியலுக்கு மாற்று
நாம் தமிழரே...
இந்த அரசியலை மாற்று..

                                            --இப்படிக்கு
                   நாம் தமிழர் வாக்காளன்..

Tuesday, April 5, 2016

என் கருத்துச் சுதந்திரம்..

நெருப்பாய் இரு..
இல்லை
நீராய் இரு..
இரண்டுக்கும் நடுவே
இழுபறியாய்
இருப்பதை விட
இறப்பது சிறப்பு

தவறாகவேனும்
ஒரு கருத்து
வைத்துக்கொள்.
கருத்தில்லாமல்
இருப்பது
உயிரில்லாமல்
வாழ்வதற்கு சமம்.

கருத்துக்கள்
பகிரப்படும்போது
ஒன்று வெளிப்படையாய் ஆதரி
அல்லது எதிர்.
இது கருத்துக்களை விட
உன்னை பரிசீலிக்க
உதவும்

குற்றவாளி
தவறு செய்கிறவன்
மட்டுமல்ல.
கருத்துச்சொல்ல
தகுதியிருந்து
தவறியவனும்தான்

நீ கலந்துரையாட
தாயரானால்
பேசுவதற்கு முன்
கேள்..
கேட்பதற்கு முன்
யோசி.

உன் கருத்தை
பேசாமல்
பிரச்சனையை
தீர்ப்பதை விட
உன் கருத்தை
பதிவிட்டு
பிரச்சனையை
வளர்ப்பது உயர்வு.



Friday, February 19, 2016

தமிழர் அரசியல்..

நாம் தமிழர்
புரட்சியால்
வெடித்துக்கொண்டிருக்கிறது
தமிழகம் அங்கே..

நாம் தமிழர்
நேசனாய்
என்ன செய்வேன்
நான் மட்டும்
இங்கே..

கடல்கடந்த
அந்நிய தேசத்தில்
கனொலிகளின் காட்சியை
பகிர்வதை விட..
என்ன செய்து விட
முடியும் என்னால்  ??

முடியும்..

நம்மால்  முடியும்..

குடும்பம் வழியே
 எண்ணங்களை
ஒட்டுகளாய் மாற்று..

ஒன்று ஆறாகும்
ஆறு நூறாகும்..
நூறு ஆயிரமாகும்
ஆயிரம் அதிகாரமாகும்..

சுயநலமில்லாத சர்வாதிகார
தமிழர் ஆளும் ..
தமிழகம் திரும்ப
தயாராவோம்.

Sunday, February 14, 2016

காதலர் தின வாழ்த்துக்கள்

என் வாழ்க்கைக்கான
பதிவுகளின் தொடக்கம்
 உன்
வாழ்த்துகளுக்கான
ஒவ்வொரு
வார்த்தை
சேகரிப்பிலும்
தொடங்குகிறது..

நெடுந்தூரம்
உன் நினைவுகளில் 
பயணித்து 
அயற்சியாகும் பொழுதெல்லாம்..
நீ வண்ணமென
வந்துபோகும்
மின்னல் இடைவெளியை 
அசைபோட்டே
மகிழ்ச்சியாகிறேன்..

காதல்
தோல்விகளில்தான்
கவிதைகள் 
அழகாகுமாம்..
எனக்கு மட்டும்
ஏன் இந்த விதிவிலக்கு..
என் கவிதைகள்
மட்டும்
எப்போதுமே
அழுகையாகிறது..


காதலர் தின வாழ்த்துக்கள்....



Sunday, January 17, 2016

ஜல்லிக்கட்டு..

விலங்கு நல உரிமை பேசும் 
எந்த நாக்கும் இறைச்சி 
விற்பனையை விலக்கியதாய் 
தெரியவில்லை.

அரசியல் ஆதாயம் 
தேடாத  எந்த கட்சியும் 
ஜல்லிகட்டை  ஆதரித்ததாய் 
தெரியவில்லை..

நீதி அரசர்களின் 
விவாதங்களில் கூட 
காளைகள் கட்சிபொருளா 
இல்லையா என்பதை 
தாண்டவில்லை..

என்ன உண்ண வேண்டும் 
என்ன உடுக்க வேண்டும் 
எங்கு படுக்க வேண்டும் 
என்று தீர்மானிப்பதை
அடுத்தவனிடம் கொடுத்துவிட்டு..

ஜல்லிக்கட்டு விளையாட 
வேண்டுமென்று  
அடம் பிடிப்பது மட்டும் தான் 
இன்று 

தமிழர் உரிமை..

பொறு.. 
அதையும் அவர்களே 
சொல்வார்கள்..

எப்படி விரும்பாமல் 
ஒவ்வொன்றையும் 
பழகிக்கொண்டாயோ 
இதையும் 
பழகிக்கொள்வாய்..

நான் ஏன் ???

                                            புலி வருது கதையா.. ஆறு வருசம் விசா முடிஞ்சு சென்னைக்கு திரும்ப தயாரானான் நலன். தயக்கதுடனே தயாரானாள் மனைவி அருள்மொழி. ஆறுவருட போதனையை அவன் அரை நாழி கூட யோசிக்கவில்லை என்பது அவளுக்கு சற்றே வருத்தம் தான். என்ன செய்ய, இடம் பெயர்ந்து பழகப்பட்ட பெண்ணினத்திற்கு இதெல்லாம் பழசு என்று புலம்பிக்கொண்டே ஆறுதல் அடைந்தாள்..


                                        இருந்தா..நம்ம நலன் சார் மாதிரி இருக்கணும்டா .. வந்தாரு.. ஆறு வருஷம் நல்லா சம்பாரிச்சுட்டு.. இந்தியா போறாரு.. புதிதாய் அமெரிக்கா வந்த  அலுவலக கத்துக்குட்டிகளின் ஓய்வு நேர பேச்சு, நலனுக்கு உற்சாகம்  அளிக்காமல் இல்லை.. இருந்தாலும் அவன் மட்டுமே அறிந்த கசப்பான உண்மையை, கார்பரேட் புன்னகையில் புதைத்து விட்டு விடை பெற்றான்..


                       சென்னை விமானத்தில் ஏறி, கண்மூடிய நேரத்தில் ஆரம்பமானது, எப்போதுமே அவனை விரட்டிகொண்டிருக்கும் அந்த கேள்வி..




                     நான்  ஏன் ..................................................?????