விலங்கு நல உரிமை பேசும்
எந்த நாக்கும் இறைச்சி
விற்பனையை விலக்கியதாய்
தெரியவில்லை.
அரசியல் ஆதாயம்
தேடாத எந்த கட்சியும்
ஜல்லிகட்டை ஆதரித்ததாய்
தெரியவில்லை..
நீதி அரசர்களின்
விவாதங்களில் கூட
காளைகள் கட்சிபொருளா
இல்லையா என்பதை
தாண்டவில்லை..
என்ன உண்ண வேண்டும்
என்ன உடுக்க வேண்டும்
எங்கு படுக்க வேண்டும்
என்று தீர்மானிப்பதை
அடுத்தவனிடம் கொடுத்துவிட்டு..
ஜல்லிக்கட்டு விளையாட
வேண்டுமென்று
அடம் பிடிப்பது மட்டும் தான்
இன்று
தமிழர் உரிமை..
பொறு..
அதையும் அவர்களே
சொல்வார்கள்..
எப்படி விரும்பாமல்
ஒவ்வொன்றையும்
பழகிக்கொண்டாயோ
இதையும்
பழகிக்கொள்வாய்..
No comments:
Post a Comment