Thursday, July 17, 2014

எழுத்தின் சினம்..

குத்திக் கிழித்து..
கூறுபோட்டு..
குறி அறுத்து..
அறுத்த ரத்தம் குடிக்கவைத்து..
உயிர் மட்டும் விட்டு..
ஒவ்வொன்றாய் வெட்டி..
எலும்பு நொறுக்கி
மயிர் கொழுத்தி..
தலையறுத்தும் தீராது.
வன்புணர்வாளர்களை வாசிக்கும் போதெல்லாம்
எழுதிக்கொல்ல நினைக்கும் என் எழுத்தின் சினம்..

Wednesday, July 9, 2014

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கூகுளின் கடைசி பக்கம் வரை
தேடியும் கிடைக்காததால்
உன் பிறந்த நாளுக்கான கவிதையாய்
உன் பெயர் மட்டும்...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்  ப்ரியா 

Monday, June 30, 2014

திருமணத்திற்கு பிறகு...

இயல்பு புரியும்
இயலாமை உரைக்கும் 
தன்மானம் வெட்கப்படும்
அறிவு ஆறுதல்படுத்தும் 
வார்த்தைகளுக்கு வேறு பரிமாணம் பிறக்கும் 
விட்டுக்கொடுத்தல் விசாலமாகும்
தனிமை  தொலையும்
இனிமை இரட்டிப்பாகும் 
இன்னொரு உலகம் இயல்பாகும்
வாழ்கை அர்த்தப்படும்.

Thursday, February 13, 2014

காதலர் தின வாழ்த்துக்கள்

காதலர் தின வாழ்த்துக்கள்..

கண்ணே காதலியே
உன் காதகுடு உண்ம சொல்ல..

காலமெல்லாம் காத்திருந்து
கல்யாணமும் முடிஞ்சிருச்சு..
காணாத கனவெல்லாம்
கண்முன்னே பலிச்சிருச்சு..

காத்திருந்து காத்திருந்து
காதலிச்ச காலமெல்லாம்
நம்ம கண்முன்னே நிக்கையிலே
கண்மணியே கவிதையாச்சே..

சேந்திருக்கும் நேரமெல்லாம்
சேத்துவைக்க நெனைகிரப்போ
சேராம தடுக்கும் இந்த வேலையைத்தான்
வெருக்குரேனே..

கலையில போன என்னை
நீ கானாமுன்னு தேடுரப்போ
கண்ணுக்குள்ள வச்சிருக்கும்
என் கண்ணீருக்கும் வலிக்குதேடி..

நீதான் என் உலகமுன்னு
சொல்லும்போது ரசிக்கறவன்
உருலுற வாழ்கையில ஒதுங்கி
நிக்குறேன..

காலையில மாலையில
உன்ன கண்குளிர பாக்குறப்போ
கவிதை எழுத போன என்ன
உன் காபி வந்து தடுக்குதேடி..

விட்டுப்போன வார்த்தையெல்லாம்
கவிதையின்னு கொட்டுரேனே
வேலன்டின்ஸ் நாளுக்குத்தான் 
விதவிதமா புலுகுறேனே.. 

ஊமையா இருக்கிறது 
உண்மையின்னு நினைக்காத
உசிரா இருக்குறத
ஒருபோதும் கணிக்காத..

கண்ணே கண்மணியே
ஒருபோதும் கலங்காத.
காலமெல்லாம் காதலிக்கும்
கண்ணன்தாண்டி உம் புருஷன்..

கண்ணே காதலியே
உன் காதகுடு உண்ம சொல்ல..