Thursday, April 21, 2016

சூடு, சொரண..

பொதுக்கூட்டத்தில் மேலும் இருவர் பலி..

செய்தியை படித்து விட்டு
சாதாரணமாய்
கடந்து போகிறோம் நாம்.

இறந்தவர்கள் 
நம் குடும்பத்தை
சேர்ந்தவராக
இருந்தால்
நம் கோபம்
என்னவாக இருக்கும் ?

உப்பு சிறிதேனும்
நம் உணவில்
சேர்த்துக்கொள்வது
உண்மையானால்..

ஓடுகிற குருதியில்
ஒருதுளி
சூடும், சொரணையும்
நமக்கு இருக்குமானால் ..

திராவிட அரசியலை
வேரோடு புதைத்து
இறந்தவர்களுக்கு
இரங்கல் செய்வோம்..







No comments:

Post a Comment