Sunday, April 10, 2016

நில் கவனி கடந்து போகாதே..

என் முகநூல் நண்பர்களுக்கு

"நாம் தமிழர்"
கருத்துக்களையும்,
காணொளிகளையும்  சிலர்
திரும்ப திரும்ப
பதிவிடுவதன் காரணத்தை
எப்போதாவது யோசித்ததுண்டா ?

பதிவிடுபவர்களின்
முந்தைய பதிவுகளை
வைத்து அவர்கள் தன்னை
முன்னிறுத்தி பதிவிடுபவர்களா?
அல்லது விளம்பரத்திற்காக
பதிவிடுபவர்களா?
என்று ஆராய்ச்சி நடத்தியதுண்டா ?

நாம் தமிழரை
குற்றம் சொல்பவர்களை
தவிர்த்து பிற கட்சிகளை
வெளிப்படையாக
ஆதரிக்கும் நண்பர்கள்
யாரேனும் உள்ளார்களா
என்று வினவியதுண்டா ?

இன்றைய கால கட்டத்தில்
ஒரு அரசியல்  நிலைப்பாட்டை
அறிந்து அதனை ஆதரித்து
பொது தளத்தில் பதிவிட
முன்வரும்
உங்கள் நண்பர்களின்
எண்ணிக்கை
என்ன தெரியுமா?

பிற கட்சிகளை
சேர்ந்த உங்கள்
நண்பர்களில்
எத்தனை பேர்
இப்போது
நாம் தமிழரை
ஆதரிக்கிறார்கள் என்று
கணக்கு பார்த்ததுண்டா?

இந்த கேள்விகளை
உங்களுக்குள் கேட்டு
பதில்களை வரிசைபடுதினால்
மிஞ்சுவது நீங்கள்
நாம் தமிழரை
ஆதரிக்க வேண்டும்
என்ற நிலைப்பாடு
மட்டுமே..

தமிழகத்தில்
நாம் தமிழரை
நிராகரித்துவிட்டு
நீங்கள்
எந்த கட்சிக்கு
ஒட்டு போடா போகிறீர்கள்?

ஊழலில் தின்று கொழுத்த
திராவிட கட்சிகளுக்கா  ?

சகதியில் ஊறித் திளைக்கிற
சாதிக் கட்சிகளுக்கா ?

பேரம் படியாமல் கூடி நகைக்கும்
கூட்டணி காட்சிகளுக்கா ?

நம் மௌனம்தான்
இதுவரை ஆண்ட,
ஆளுகிற
கறைபடிந்த
கட்சிகளின் வெற்றி..

மௌனம் களைப்போம்..

கொத்துக் கொத்தாய் 
கொன்று குவிக்கப்பட்ட 
நம் சொந்தங்களை 
காப்பாற்ற முடியாத  
குற்ற உணர்ச்சி நமக்கு 
இன்னும் இருக்குமானால்..

காட்டு மரம் 
வெட்டியதற்காக 
ஓடவிட்டு
சுட்டுக் கொல்லப்பட்ட 
தமிழர்களை  பற்றிய 
பரிதாபம் நமக்கு 
இன்னும் இருக்குமானால்.. 

அம்மாவின் சிறைக்காக 
கண்ணீர் சிந்தும்   
அண்டை மாநில 
தண்ணீருக்காக   
பிச்சை எடுக்கும்  
அவமானம்  நமக்கு 
இன்னும் இருக்குமானால்.. 

நம்  கரங்களை 
வலுப்படுத்துவதை தவிர 
வேறு வழியே இல்லை..
ஆதரிப்போம் 
நாம் தமிழர்..

இது  
தமிழ்நாட்டில்
வாழ்ந்த 
வாழ்கிற 
தமிழ் பேசும் 
நாம் ஒவ்வொருவரின் 
கடமை..

பகிர்வோம்... 
பரப்புவோம்..
நாம் தமிழர்..

No comments:

Post a Comment