Saturday, May 14, 2016

மலரட்டும் மக்களுக்கான நல்லாட்சி...

கொத்துக் கொத்தாய்
கொன்று குவிக்கப்பட்ட
சொந்தங்களை
காப்பாற்ற முடியாத
குற்ற உணர்ச்சி
உனக்கு
இன்னும் இருக்குமானால்...

மானத் தமிழர்களை
மண்டியிடவைத்து
அடிமையாய்
அடிபணிய  கிடத்தியது
அவமானம் என்று
நீ
நினைப்பாயானால்

இந்த தேர்தலே
திமுக,
அதிமுகாவிற்கு
இறுதி ஊர்வலமாய்
இருக்கட்டும்..

ஓட்டுக்காக
நீ
அழுத்துகின்ற
அந்த பொத்தான்
வேட்டாய் மாறி
இவர்கள்
வெடித்துச் சிதறட்டும்..

மதுவும்,
லஞ்சமும்,
ஊழலும்,
சாதிய கொடுமையும்
இவர்களோடு சேர்த்து
மண்ணோடு மண்ணாய்
போகட்டும்..

மலரட்டும்
மக்களுக்கான
நல்லாட்சி
அதற்க்கு
நீ
போடும்
ஓட்டு
மட்டுமே
சாட்சி..

No comments:

Post a Comment