Sunday, May 15, 2016

அறிவு என்பது..

பெரியாரை
தமிழின தலைவராக
ஏற்க முடியாது
என்பற்காக
சீமானும் கருணாவும் ஒன்று
என்று பொய்யுரை பரப்பும்
திராவிட கட்சி நண்பர்களை
ஏன் யாரும் கேள்வி கேட்க
மறுக்கிறீர்கள் ?

தமிழ் நாட்டில் தமிழன்
ஆள வேண்டும் என்று
நாம் தமிழர் பேசுகையில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
தெலுங்கு எதிர்ப்பு வாதம்
பேசுபவர்கள்தான்
நாம் தமிழர் கட்சியினர்
என்று பேசும்
தெலுங்கு நண்பர்களை
ஏன் யாரும் கேள்வி கேட்க
மறுக்கிறீர்கள் ?

துண்டறிக்கை
அடிக்க கூட
காசு இல்லாத
நாம் தமிழர்
கட்சியை
ஓட்டுக்கு இரு  நூறு
கடலூரில் கொடுக்கிறார்கள்
என்று  பரப்பும்
அதிமுக /திமுக
நண்பர்களை
ஏன் யாரும் கேள்வி கேட்க
மறுக்கிறீர்கள் ?

ஐம்பது வருடங்கள் 
நடந்த கேடுகெட்ட 
அரசியலை கேள்வி 
கேட்க முன்வராத 
நண்பர்கள் 
முதல் முறையாக 
களமிறங்கும் 
நாம் தமிழரை மட்டும் ஏன் 
குறை கூற வேண்டும்  என்று
ஏன் யாரும் கேள்வி கேட்க
மறுக்கிறீர்கள் ?

முரண்பாட்டு 
கருத்துக்களை மட்டுமே 
முன்வைக்க முனைகிற 
நண்பர்கள் 
நாம் தமிழர் கட்சியின் 
சரியான கருத்துக்களை 
பகிர முன் வராதது ஏன்?

அறிவு என்பது 
தவறுகளை சுட்டிக்காட்டுவது 
மட்டுமல்ல.. 
சரியானவற்றை 
அடையாளப் படுத்துவதும்தான்..

No comments:

Post a Comment