Wednesday, February 13, 2013

இப்படிக்கு காதல்..

அழகானவற்றின் வரிசையில்
இன்றும் எழுதி கொண்டிருக்கிறேன்
உன் பெயரை...


நான் உன்னை நினைத்துக்கொண்டு இருப்பதை விட 
அழகாய் இருக்கிறது..
நீ என்னைத்தான் 
நினைதுக்கொண்டிருப்பாய்
என்று நினைத்துக்கொள்வது..
காதல்  தொடர்கதை..

எப்போதாவது நம் இரண்டு குடும்பங்களும்
சந்திக்கும் வேளைகளில்..
நீ என் மனைவி அழகாய் இருக்கிறாள் 
என்று சொல்வதும்..
நான்  உன் கணவன் நல்லவனாய் இருக்கிறான் 
என்று சொல்வதும்..



 காதல் ஒரு கனவு 
சிலருக்கு பலிக்கும்..
பலருக்கு வலிக்கும்..


உன்னை போலவே அழகு..
உன்னை போலவே சிரிப்பு..
உன்னை போலவே கவிதை நடை..
ஆனால்
என்னை போலவே எப்போதும்
அழுது கொண்டு இருக்கிறது
உன் குழந்தை..





 மத்தாப்பாய் சிரிக்கிறாய்
தீபாவளியில்..
கரும்பாய் இனிக்கிறாய் 
பொங்கலில்..
பூவாய் பூக்கிறாய் 
புத்தாண்டில்..
இன்று காதலர் தினம்..
உன் காதலை சொல்..
இல்லையேல்..
உன்னை காதலிக்கவாவது  சொல்..


No comments:

Post a Comment