எல்லாவற்றையும்
வரையறுத்துக்கொண்டே
முன்னேறுகிறது
வயசு..
வயதின் எண்கள்
உயர உயர
வார்த்தைகளில்
வரிகள் சுருங்கிக்கொண்டே
போகிறது..
வயதின் எந்த
இடத்தில் நின்று
பார்த்தாலும்
முந்தைய வயதுகளின்
முட்டாள் தனங்களே
முன் நிற்கின்றன..
தங்கி விடுதல்
எந்த வயதிலும்
தாக்கி விடுகிறது..
பெரும்பாலும்
அறிவிற்கு வயதில்லை
வயதிர்ற்கு அறிவில்லை
No comments:
Post a Comment