வாழ்வெனும் அற்புதத்தில்
அரை நூற்றாண்டு
அனுபவம் சுவைத்து,
கனத்த குரலுக்குள்
இனிப்பு இதயத்தால்,
மனிதர்களை
பேரன்பாலும்,
பேருதவிகளாலும்
மீட்டுக்கொண்டு,
அகம் உணர்ந்து,
மனிதம் புரிந்து,
சுற்றம் தெளிந்து,
வாழும்
உங்கள்
மட்டுமீறிய
கூருணர்வு
உங்களோடு
சேர்ந்து
நிச்சயமாய்
கொண்டாடப்பட
வேண்டியது..
உங்களின் இந்த
அகவை ஐம்பதில்..
எல்லா
வளமும்
நலமும்
சுற்றமென
சூழட்டும்..
கொண்டாட்டம்
உங்கள் அன்றாடம்
ஆகட்டும்..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அத்தான்..
என்றென்றும் பேரன்புடன்
சேது
No comments:
Post a Comment