Sunday, July 21, 2013

கவிதை குட்டிகரணம்..

அர்த்தமற்ற வாழ்கை
நிம்மதியற்ற தூக்கம்
நீயில்லாமல் நான்..

ஒவ்வொரு நாளும் பிறந்து
தன்னை புதுப்பித்துக்கொண்டே
உயிர்பித்துக்கொள்கிறது
உனக்கான என் கவிதை..

"வாழ்கை உன்னோடுதான்"
முடிவுசெய்த கணத்திலிருந்து
ஆரம்பமாகிறது.
குட்டிகரணம் போட்டு குதுகலிக்கும்
என் வாழ்கை..

நீ பிறந்த இந்நாளில்
பிறப்பதற்க்காய் பூரிக்கிறது.
பிறந்தநாள் வாழ்த்துப் பாட
அடம்பிடிக்கும் என் கவிதை..




No comments:

Post a Comment