Wednesday, January 18, 2017

வழிகள் பிறக்கும்..

தமிழா தமிழா..
இனி நம்  கரங்கள்
உயர்ந்தால்
வழிகள் பிறக்கும்..

வழிகள் முழுதும்
தடைகள் இருக்கும்
அதை நம்
வலிமை உடைக்கும்.

இனியும் இனியும்
கரங்கள் இணையும்
அதில் நம்
விலங்குகள் உடையும்..

வடக்கும் அறியும்
வலிமை புரியும்
அதுவும்
நம்மிடம்  பணியும்

இளமை துடிக்கும்
இடர்கள்  இடிக்கும்
அரசியல் அதனுள்
வெடிக்கும்..

தமிழா தமிழா
இனி நம்  கரங்கள்
உயர்ந்தால்
வழிகள் பிறக்கும்..


No comments:

Post a Comment