Monday, October 14, 2024

இயலே..

 இயலே 

இனியவளே 

எனக்கு வாய்த்த 

வரமே.. 

நான் இளைப்பாறும் 

மரமே..

உன்னோடு 

நானும் 

வளர்ந்து கொண்டே 

இருக்கிறேன்..

உன் 

நினைவாற்றலும் 

முதிர்ச்சியும் 

கருணையும் 

கனிவும் 

நித்தம் 

எனை 

உன்  மேல் 

பித்துக்கொள்ள 

வைக்கிறது..

நீ கற்பதை போலவே 

கற்றுக்கொடுப்பதிலும் 

கெட்டிகாரி..

நான் வேண்டுவதெல்லம் 

உனை பார்த்து ரசிக்க 

என் கண்களும்..

சேர்த்து நடக்க 

என் 

கால்களும் தான்.




No comments:

Post a Comment