Sunday, November 17, 2024

அமரனுக்கு பிறகு..

படம் முழுக்க பழக்கப்பட்ட பார்வை..

இந்து எனக்கு புதிதானவள் அல்ல 

அவள் மட்டுமீறிய காதலும்

புதிதில்லை எனக்கு..

அது எப்போதும் துரத்திக்கொண்டே 

இருக்கும் பார்வை..

அது எந்நேரமும் கேட்டுக்கொண்டே 

இருக்கும் குரல்..

என்னை விட்டு 

விலகி நடக்க விரும்பா 

நிழல் அது..

அது நெடுந்தூர உறவு 

இல்லை எனக்கு..

யார் அவள்..

ஏன் இத்தனை 

பரிச்சயம் எனக்கு..

இத்தனை நாளும் 

புறந்தள்ளிய,

விடுபட நினைத்த 

உணர்வுகள் 

ஏன் எனக்கு

குற்ற உணர்வுகளாய் 

தொக்கி நிர்கின்றன ?

நீண்ட நேரத்திற்கு 

பிறகு 

நெடுந் தேடலுக்கு 

பிறகு 

நெற்றிப் பொட்டில் 

சட்டென 

உரைத்தது 

உன் பெயர்..

.

.

.

.

.

.

ப்ரியா..





 

No comments:

Post a Comment