-----------------1-------------------
கண்டங்கள் தாண்டி
கடல்கள் கடந்து
மேகம் நுழைந்து
வானம் பறந்து
வண்ணத்து பூச்சிகளாய்
வரவேற்கிறோம்.
உங்கள் மனங்கொள்ளா
பிரியங்களுடன்
மணமக்களாய் இணையட்டும்
எங்கள் மாமனும், மணிமேகலையும்
---------------------இயல் & இசை
-----------------2-------------------
தோள்களில் சுமந்து
முத்தங்களில் நிறைத்து
சின்னச் சிறு கதைகள் சொல்லி
சித்திரம் சேர்ந்து வடித்து
நித்தம் வேடிக்கை காட்டி
தினமும் இனிப்பு ஊட்டி
அன்பால் அணைத்த
எங்கள் ஆருயிர் மாமன்,
சங்கம் வளர்த்த
சிங்க மதுரையில்
மாலையிடுகிறான்
மணிமேகலைக்கு.
வாருங்கள்
உங்கள் வரவுகளில்
பூக்கட்டும்
மணமக்களின்
மாங்கல்யம்..
---இயல் & இசை
No comments:
Post a Comment