முத்தங்களில் முழுவதுமாய் கரைந்து..
உச்சி வருடையில் உயிர் நீட்டிப்பிற்கான அர்த்தம் அறிந்து..
அங்க அசைவுகளில் ஆர்வத்தின் ஆழம் புரிந்து
அழுகும் போதெல்லாம் அன்பின் முதிர்ச்சி முகர்ந்து..
இமை இசையில் இளைப்பாறி..
இதழ் மௌனங்களில் கலவரமாகி..
எப்போதுமே கனவில் விழுந்து,
எப்போதாவது காலிலும் விழும்
இந்த காதல் தான் எவ்வளவு ஆச்சிரியமானது !!!

No comments:
Post a Comment