டைரி 11-04-2010 10 PM
இன்று என் வாழ்கையின் மிக அழகான நாள். காலை 6 மணிக்குதான் இந்த உலகம் என் தேவதையை தரிசித்தது.
மலரினும் மெல்லியவள் என்னவள்,,
அவளினும் மெல்லியதாய் என் மகள்..
அவளை போலவே மெல்லியதாய் அவள் அழுகையும்..
டாக்டர் என் கையில் அவளை கொடுத்ததும், இதுவரை நான் கண்டிறாத என் கண்ணீர்தான் அவளுடனான முதல் ஸ்பரிசம்..
மலரினும் மெல்லியவள் என்னவள்,,
அவளினும் மெல்லியதாய் என் மகள்..
அவளை போலவே மெல்லியதாய் அவள் அழுகையும்..
டாக்டர் என் கையில் அவளை கொடுத்ததும், இதுவரை நான் கண்டிறாத என் கண்ணீர்தான் அவளுடனான முதல் ஸ்பரிசம்..
திருமணமான ஏழாவது வருடத்தில் இவள் எங்களுக்கு கிடைத்தது கூட என் கண்ணீருக்கு காரணமாக இருக்கலாம். பல நேரங்களில் காத்திருப்புக்கான காரணங்களை இயற்கை இப்படிதான் ஈடு செய்கிறது.
நீண்ட நேரம் ரசித்துவிட்டு.. அவளுக்கான முதல் முத்தத்தை என் முரட்டு மீசையீன் வன்முறையோடு பதிவு செய்தேன். அவள் கை, கால்களை உதறி என் முத்தம் ஏற்கப்பட்டதை உறுதி செய்தாள்.
சார்.. உங்க மனைவி கன்முளிசிட்டாங்க.. என்று நர்ஸ் சொன்னதும், இதுவரை ஏங்கி தவித்துகொண்டிருந்த தருணங்கள் என்னை அவள் அறை நோக்கி தள்ளியது. எங்களை எதிர்பார்த்திருந்தவலாய் என்னவள் புன்னகைக்க.. எங்கள் தேவதையை அவளிடம் காட்டினேன்.
அவளை வாங்கி மார்போடு அணைத்துக்கொண்டு, முழுவதுமாய் முத்தத்தில் நனைத்துவிட்டு.. கண்ணீர் கலந்த கண்களோடு என் கண்ணத்தில் முத்தமிட்டாள்..
மனைவி கணவனுக்கு இரண்டாம் தாய்..
கணவன் மனைவிக்கு முதல் குழந்தை...
எப்போதோ படித்த வாசகம்... மூளையில் இடம் வலமாக ஓடியது....
No comments:
Post a Comment