Monday, May 6, 2013

இது கவிதை காலம்..

உன்னுடன் என்
இதயம் பேசும் உரையாடல்கள்
கவிதையாய் கசிகிறது காகிதத்தில்

எழுதப்படாத கவிதைகளாய்
நிறைந்து கொண்டே இருகிறாய்
என் இதயத்தில்..





பிறந்ததின் பயனை அடைந்ததாய்
கட்டிலில் கசங்கி கிடக்கிறது
நீ கழட்டி எறிந்த சேலை..

வெட்கப்படாதே..
உன் கண்ணங்கள் மேலும் அழகாகும்..
அது என் கவிதையை மேலும் அழகாக்கும்..








ஒவ்வொரு முறை உன் செல்பேசி அழைப்பை
துண்டிக்கும் போதும்
இறந்து பிறக்கிறது என் இதயம்..




நீ ருசிப்பதர்காகவே
இவ்வுலகில் உயிர் துறக்கின்றன
கோழிகள்..






ஐயோ..
சீ..
போங்க..
இதைவிட இதயத்திற்கு நெருக்கமான
வார்த்தைகள் கண்டறியப்படவே இல்லை..








ஊர் சுற்றி திரிகிறது
என் கவிதை
என்னவள்..









வெயிலுக்கு ஒரு வேண்டுகோள்
என்னவள் வெளியில் வருகிறாள்..
வேண்டுமானால் என்னை எரித்துக்கொள்..






உன்னோடு உரையாடாத இரவுகள்
நான்  நரகத்தில் பயணப்பட்ட பொழுதுகள்..













நிரம்பி வழிகிறது காதல்
தாகத்தில் தவிக்கிறேன் நான்.
உன் எச்சில் முத்தம் தா
முடித்து கொள்கிறேன் என் விரதத்தை





மழைத்துளியாய் மாறத் தானடி
நினைக்கிறேன்
உன் மேனி நனைக்க..
என்ன செய்வது...
எல்லாவற்றையும் எரித்துவிடுகிறது
உன்னை நினைக்கும் போதான என் வெப்பம்..



உன் புகைப்படத்தை முத்தமிட்டுத்தான்
உடைகின்றன..
என் மோகக்குமிழிகள்..




சேலை கட்டிய சித்திரம்
பேசுமா ?
என்னவள் பேசுகிறாள்..




யார் பேசியும் கலைய மறுக்கிறது..
உன்னை பற்றிய என் கனவு..






ஆச்சர்யம்!!!
உன்னை பற்றிய
என் புலம்பல்கள் எல்லாம்
கவிதையாகி போனது..


உன் புகைப்படம் பார்க்கும் போதெல்லாம்
படம் பிடிக்கிறது என் மனது..






என்னை கேட்காமல்
எப்படி எடுத்துக்கொண்டாய் ?
என் நாட்களின்
ஆரம்பம், முடிவு
இரண்டையும் முடிவு செய்யும் பொறுப்பை



உன்
பார்வைகளில் கரைந்து போவதற்கும்
வார்த்தைகளில் உறைந்து போவதற்கும்
வாழ்கையில் கவிதையாய் கலந்து போவதற்கும்
மடி சாய்ந்து உறங்கி போவதற்கும்
நீ
வரும் வழி நோக்கி காத்திருக்கிறேன்




No comments:

Post a Comment