Sunday, May 28, 2017

மதுரை - மீனாட்சி - அழகர்

மதுரைக்குத் தெற்கே
மழை பெய்யாக் கானலிலே
தரிசாக் கிடக்குதுன்னு - மீனாள்
சம்பாவ விட்டெறிஞ்சா..

அள்ளி விதை பாவி -மீனாள்
அழகு மலை தீர்த்தம் வந்து
வாரி விதை பாவி -மீனாள்
வைகை நதித் தீர்த்தம் வந்து
சம்பா கதிரடித்து -சொக்கர்
தவித்து நிற்கும் வேளையிலே
சொர்ணக்கிளி போல -மீனாள்
சோறு கொண்டு போனாளாம்

நேரம் ஆச்சுதென்று -சொக்கர்
நெல்லெடுத்து எறிந்தாராம்.
அள்ளி எறிந்தாராம்
அளவற்ற கூந்தலிலே
மயங்கி விழுந்தாளாம் -மீனாள்
மல்லிகை பூ மெத்தையிலே
சோர்ந்து விழுந்தாளாம்
சொக்கட்டான் மெத்தையிலே..

அழுத குரல் கேட்டு
அழகர் எழுந்திருந்து
வரிசை கொடுத்தாராம்
வையகத்தில் உள்ளமட்டும்
சீரு கொடுத்தாராம்
சீமையிலே உள்ளமட்டும்
மானா மதுரை விட்டார்
மதுரையிலே பாதி விட்டார்.
தல்லா குளமும் விட்டார்
தங்கச்சி மீனாளுக்கு
தளிகையிலே பாதிவிட்டார்..

                           - பண்பாட்டு அசைவுகளில் இருந்து..
#மதுரை  #மீனாட்சி #அழகர் 

No comments:

Post a Comment