Tuesday, May 9, 2017

நினைவலைகள்-1

நினைவலைகள்..

அப்போ எனக்கு மூணு வயசிருக்கும்.. விடியகாலை நாலு மணிக்கு வாரிச்சுருட்டி அப்பாவும், அம்மாவும் எந்திரிக்க, ஏங்கூட சேந்து ஒன்றரை வயசு தங்கச்சியும் எழுந்துகிட்டா..

அப்ப நாங்க மொட்டை மாடி கூரை வீட்ல தங்கியிருந்தோம். கொட்டாய் விட்டுக்கிட்டே, கூரை வழியா வானத்தை பாக்குறேன், அது ஒரே கருப்பா மழ வரமாரி இருக்கு. அவசர அவசரமாய் ரெண்டு பெரும், ரெண்டு பெரிய்ய்ய்ய கொடத்தோட, நல்ல தண்ணி எடுக்க கெளம்பிட்டு இருந்தாங்க..

பிள்ளைகளை ஒத்தையில விட்டுட்டு போர பதட்டம் அம்மாவுக்கு கொஞ்சம் அதிகமாவே இருந்துச்சி..

அதுக்கப்புறம் இருபத்தஞ்சு வருஷம்..

அதே நாலு மணி..
வேற வேற இடம்..
வேற வேற தேவை..
ஆனா அதே உழைப்பு..

கடைசியா ரிலாக்ஸா நாலஞ்சு வருஷம் ஓடிக்கிட்டு இறுக்கப்ப..

திடீர்னு அதே உழைப்பு..  

நல்ல வேளை அய்யனாரு அம்புட்டையும் நிறுத்திட்டறாரு..

உழைத்தே பழகிய இருவரில்
இன்றும்
ஓய்வெடுக்க மனமில்லாமல்
ஒருவர்..
ஓய்வெடுக்க வழியில்லாமல்
இன்னொருவர்..

அப்பா = அம்மா  =  உழைப்பு

நூறு வருடம்
மன நிறைவோடும்,
மகிழ்ச்சியோடும்
நீங்கள் வாழ வேண்டும்
என்ற விருப்பத்தோடு
திருமண நாள் வாழ்த்துக்கள்..


No comments:

Post a Comment