Sunday, December 9, 2018

துணைநலம்

வருடங்கள்  ஓட
வார்த்தைகளுக்கான
தேர்வும்,  தெளிவும்
கூடிக் கொண்டே இருக்கிறது..

துணைநலம்..

உன் துணை
என் நலம் எப்போதும்..

திருமண நாள்
வாழ்த்துக்கள்..

வாழ்தல் இனிது.

அதனினும்
இனிது
உன்னோடு
வாழ்தல் 

Tuesday, July 10, 2018

இயலுடன் இனிய பிறந்த நாள்..

காகிதங்களில் 
எழுதிய 
என் கவிதைகளில் 
ஒன்று
உயிர்பெற்றெழுந்து..
வண்ணங்கள் வீசி...
சிறகுகள் விரித்து.. 
மனம் மகிழ்ந்து
சிரிக்கிறது..
உன் மடியில்

நான்  எழுதி
நீ வளர்த்த 
நம் புதுக்கவிதை
இயலுடன் 
இனிய பிறந்த நாள் 
வாழ்த்துக்கள் 

Monday, July 9, 2018

நேரம்..

நாளெல்லாம் அலைந்து
உனக்கு பிடிக்கும் என்று
நான் தேடிய எதுவும்
எனக்கு பிடிக்காமல்
வெறுங்கையில்
வீடு  திரும்பினேன்.

ஏன் இவ்வளவு நேரமாச்சு ?

என்று நீ
கேட்ட நேரத்தில்

அனுப்ப ஆயத்தமானேன்
உன் பிறந்தநாளுக்காக
அலுவல் விடுப்பு..

பிறந்த நாள்
வாழ்த்துக்கள்..

Sunday, May 13, 2018

ஆழ்மனம்

மனித 
மனங்களின்
வெறுமையில்
புதைகிறது
உலகத்தின்
புறப் பொருள்கள்


 

Friday, December 8, 2017

வாழ்க்கைத்துணைநலம்..

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்..

வள்ளுவன் வடித்த வாழ்க்கைத்துணைநலம் என்னில்லறம்
என்பதின் மொத்தமாய்  நீ..

திருமண நாள் வாழ்த்துக்கள்..


உன்னோடு
உருவான
இல்லறம்
இப்போது
துணைநலம்
தாண்டி
மக்கட்பேறு
நோக்கி
நீள்வதின் 
மட்டற்ற
மகிழ்ச்சியில்
மீண்டும்
ஒருமுறை
மண நாள்
வாழ்த்துக்கள்..

Monday, September 4, 2017

விடுபட்ட சகோதரி..

கண்டம்
தாண்டி
சொந்தம்
தொலைத்து
வாழ்கிற
வெளியூர்
வாழ்க்கையில்..

இலையில்
இன்னுமொரு
பலகாரம்
எனக்கு மட்டும்
வைக்கிற
நண்பனின்
மனைவியில்
சகோதரியை
கண்டுவிடுகிறது
என் கண்கள்..

மன நோயாளியாகிய நாம்..

குறை சொல்லி
பழகிப்போன
தமிழ்ச்  சமூகத்தில்
குற்றம்
செய்தவனும்
குறை சொல்லும்
கொடுமையை
உணர்ந்த
தருணங்களில்
ஆரம்பித்திருக்கும்
நம் மனநோய்.

நினைவு தெரிந்த
ஒவ்வொரு
அரசியல் நிகழ்வும்
கோபங்களாகவும்
கண்ணீராகவும்
அச்சேறுவதற்க்கு
காரணம்
என்னவாக
இருக்கும்?

முழுவதுமாய்
விடுபட்டு வேறொரு
கண்டத்தில்
வாழ்கிற
நம் நண்பர்களை
விடாமல்
ஒரு சோகம்
துரத்துவதற்கு
வேறென்ன
காரணம்
இருக்க முடியும்?

சுய மரியாதை
இன்றி வாழ்வதே
இழிவு என்ற
சமூகத்தில்
சுய மரியாதை
துளியும்
இல்லாதவர்களை
ஆள அனுமதித்த
நம் மனநிலை
மனநோயன்றி
வேறென்ன?

தாய் நாட்டை
நினைக்கும்
போதெல்லாம்
பூரிக்க
வேண்டிய
ரத்தம்
பொங்கிக்
கொதித்துப்
புழுங்குவது
மனநோயன்றி
வேறென்ன?

இருப்பது
வாழ்வல்ல..
அறவழியை
வகுத்து இருத்தலே
வாழ்வென்ற
புறநானுற்று
தமிழனின்
தரந்தாழ்ந்த
தற்போதய நிலை
மனநோயன்றி
வேறென்ன?

மதிகெட்டுப்போன 
இந்த மனநோய் 
தொற்றுச் 
சமூகத்தில் 
அறச்சீற்றம் 
கொண்ட 
எவனும்..
எவளும்..
அனிதாவும்.. 
வாழ்வது 
ஆச்சரியமே.

வாருங்கள்..

சில வரிகள்  
எழுதிவிட்டு..

சில முறை 
பகிர்ந்து 
விட்டு 

கொண்டாடுவோம் 
நம் மனநோயை..